முன்னணி வீராங்கனைகள் ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), லாரா சீஜ்மண்ட் (ஜெர்மனி), ஜின்யு வாங் (சீனா), ஹேரியட் டார்ட் (இங்கிலாந்து) ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்க இருந்த உள்ளூர் நட்சத்திரம் ஆண்டி மர்ரே (37 வயது, 113வது ரேங்க்) கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 10 நாட்களுக்கு முன் முதுகுப் பகுதி காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், முழு உடல்தகுதி இல்லாததால் அவர் விலகினார். கடைசி முறையாக மர்ரே விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் விளையாடுவதைக் காண ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். எனினும், சில தினங்களில் நடைபெற உள்ள இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் அவர் தனது சகோதரர் ஜேமி மர்ரேவுடன் இணைந்து களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் ரைபாகினா: விலகினார் மர்ரே appeared first on Dinakaran.