சென்னை: உதயநிதி கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுசெய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. நாகை, ஈரோடு, திருவண்ணாமலை, கரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
