திருவொற்றியூர்: எர்ணாவூரில் தெருநாய் கடித்து குதறியதில் பள்ளி மாணவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.சென்னை எர்ணாவூர் கிரிஜா நகர், மல்லிகை தெருவை சேர்ந்தவர் கீதாலட்சுமி, இவரது மகள் ஹேவந்திகா (9). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். நேற்று தனது வீடு அருகே வளர்ப்பு நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது தெருவில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று திடீரென வளர்ப்பு நாய் மற்றும் மாணவி ஹேவந்திகாவை விரட்டி, விரட்டி கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த மாணவியை உடனடியாக அங்குள்ள மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தெருநாய் பலரை கடித்துள்ளது. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதே நிலைமை நீடித்தால், பலரும் தெரு நாய் கடிக்கு ஆளாக நேரிடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, நாயை பிடிக்வேண்டும்’ என்று மாணவியின் பெற்றோர், பொதுமக்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
