அரசு பங்களாவை காலி செய்தார் லாலு மனைவி

பாட்னா: பீகாரில் முதல்வர் சாம்ராட் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. இங்கு பாஜ அமைச்சர் நந்த் கிஷோர் ராமுக்கு சர்குலர் சாலையில் உள்ள 10ம் எண் கொண்ட அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியை காலி செய்யும்படி கடந்த மாதம் மாநில கட்டிடக் கட்டுமானத் துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. அரசு விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் ராப்ரி தேவி நேற்று அரசு பங்களாவில் இருந்து காலி செய்து கவுடில்யா நகரில் உள்ள சொந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.

Related Stories: