காட்பாடி அடுத்த வஞ்சூரில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா: எம்பி கதிர்ஆனந்த் பங்கேற்பு

வேலூர், ஜூன் 6: வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் வஞ்சூரில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்கூடத்தை எம்பி கதிர்ஆனந்த் திறந்து வைத்தார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி வஞ்சூரில் எம்பி தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் வேலூர் எம்பி கதிர்ஆனந்த் கலந்து கொண்டு பயணியர் நிழற்கூடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து வஞ்சூரில் நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றியகுழு தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் சரவணன், ஒன்றிய செயலாளர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு நடந்த கிராம சபா கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் பிடிஓ ஹேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: