சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்கை மர்ம நபர் முயன்றுள்ளார். அப்போது அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓடினார். சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
