நடிகர்கள் லாப பங்கீட்டு முறையில் சம்பளத்தை பெற வலியுறுத்தி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இன்று (மே 2) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் வெளி மாநிலங்களிலும் தமிழ் படப்பிடிப்பு நடைபெறாது என்றும் சங்கத்தை மீறி படப்பிடிப்பு நடத்தினால் அவர்களுடைய திரைப்படங்களுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு தராது என அறிவிக்கப்பட்டது.
