தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே: பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் புகழாரம்!

சென்னை: தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே என பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் ‘தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும்’ எனவும் முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பத்திவிட்டுள்ளார்.

Related Stories: