சென்னை: டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ-இடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2021 முதல் 2023 வரை 45,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ .397 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
