ராஜேந்திரபாலாஜி பிரசாரத்தில் மக்களுக்கு பணப்பட்டுவாடா? வீடியோ வைரல்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் நேற்று முன்தினம் அதிமுக தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் வேட்பாளருமான ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பிரசாரத்திற்கு வந்த பொதுமக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்கு சேகரித்து முடித்து சென்ற பிறகு அங்கிருந்த பொதுமக்களுக்கு அதிமுக, பாஜவினர் வரிசையாக பணம் கொடுப்பதற்காக டோக்கன் கொடுத்துள்ளனர். இதை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிமுக பிரசாரத்தில் பணம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: