கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசுகையில், ‘‘பாஜகவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது. அதிமுகவுக்கு ஆதரவாக வேறு மாநில அமைச்சர்கள் பிரசாரம் செய்கிறார்கள். பாஜவின் கொள்கைகளை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விரைவில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் இணைந்து 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்’’ என்றார்.
