தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலமாக கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்தார்.
கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ஹெலிகாப்டரில் பணம் மற்றும் பரிசு பொருள் எதுவும் இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தினர். இதில் எதுவும் கிடைக்கவில்லை. இதையெடுத்து அண்ணாமலை அங்கிருந்து பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வாகனம் மூலமாக சென்றார்.
