மீரட்: உபி மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் அதுல் பன்வார்(35). இவரது காதல் மனைவி தாமினி. இவர்கள் 2019ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் ஹஸ்தினாபூரில் வசித்து வந்ததோடு, அங்கு கிருஷ்ணா கிட்ஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியையும் நடத்தி வந்தனர். இதற்கிடையே பள்ளியின் வாகன ஓட்டுநர் துஷார் என்கிற நிக்கி என்பவருடன் தாமினிக்கு தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து கணவனை கொல்லவும், அவர் எடுத்த எல்ஐசி இன்சூரன்ஸ் பாலிசி தொகை ரூ.20 லட்சத்தை பெறவும் கள்ளக்காதலன் நிக்கியுடன் சேர்ந்து தாமினி திட்டமிட்டார். திட்டத்தின் ஒரு பகுதியாக கணவர் அதுலுக்குப் பாலில் அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை தாமினி கலந்து கொடுத்தார். அதன்பிறகு, தாமினியின் காதலன் துஷார், தனது கூட்டாளிகளான சோனு மற்றும் உதய் ஆகியோரின் உதவியுடன் ஒரு பாம்பைக் கொண்டு வந்து அதுலின் போர்வையினுள் விட்டார்.
இதனால் அவர் உயிரிழந்தார். அவரது படுக்கையில் ஒரு பாம்பு காணப்பட்டாலும், குடும்பத்தினர் இதில் ஏதோ சதி இருப்பதாகச் சந்தேகமடைந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் காவல்துறையினர் தாமினி, துஷார், சோனு மற்றும் உதய் குமார் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
