டெல்லி: டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்வு வினாத்தாள் கசிவு, அதிகரித்து வரும் கல்விச் செலவுகள் மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன. எந்தவொரு பலப்பிரயோகமும், இந்திய மாணவர்களையோ அல்லது அவர்கள் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்ட எங்களையோ இந்த பிரச்சனையை எழுப்புவதில் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
