வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றித் திரிந்த தரணிகுமார், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவம்: புளியந்தோப்பு வஉசி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் முருகன் (40) கட்டிட தொழிலாளியான இவரருக்கு வள்ளி (38) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு முருகன் தனது மனைவி வள்ளி மற்றும் குழந்தைகளை அருகில் உள்ள தனது மாமனார் வீட்டில் விட்டுள்ளார்.
மீண்டும் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற அவர், வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வள்ளி, தனது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது மின்விசிறியில் முருகன் தூக்கில் தொங்கியது தெரிந்தது. அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புளிந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த சில மாதங்களாகவே முருகன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததுள்ளார். இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post புளியந்தோப்பு, வியாசர்பாடியில் 2 தொழிலாளிகள் தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.