தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் இருவரையும் போலீஸ் மடக்கி பிடிக்க முயன்றபோது, இருவரும் காவலர் செந்தில்குமாரையும் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி வாழை தோட்டத்தில் பதுங்கினர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்ததும், இருவரும் தப்பியோட முயன்றனர். இதை தொடர்ந்து போலீசார் பேச்சித்துரையை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். சந்துரு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேச்சித்துரையை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பேச்சித்துரைக்கு காலில் இருந்து துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
The post தொழிலாளியை கொன்று தப்பிய ரவுடி சுட்டுப்பிடிப்பு appeared first on Dinakaran.