இதனால் சங்கீதா தனது தாய் தந்தையருடன் சேர்ந்து பற்குணனை தகாத வார்த்தையால் பேசி விரட்டி அடித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த பற்குணன் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த பற்குணன் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
The post 2வது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு: மன உளைச்சலில் கணவன் தற்கொலை appeared first on Dinakaran.