அதனைத் தொடர்ந்து இருவரும் சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். மீண்டும் தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். குழந்தைகள் மகாலட்சுமியிடம் வளர்ந்து வருகின்றனர். குழந்தைகளை பார்க்க விக்னேஷ் அடிக்கடி சிவகாசி வந்து சென்றார். நேற்று முன்தினம் குழந்தைகளை பார்க்க விக்னேஷ் சிவகாசி வந்தார். அப்போது குழந்தைகளை அழைத்து வர டியூசனுக்கு சென்ற மகாலட்சுமியை வழிமறித்து விக்னேஷ் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விக்னேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மனைவியை கத்தியால் குத்திய காவலர் appeared first on Dinakaran.
