நள்ளிரவு கோயிலின் மதில்மேல் ஏறிகுதித்த மர்ம நபர்கள் உட்பிரகார கதவின் பூட்டை உடைத்து, உள்ளே உள்ள கிரீல் கேட்டினையும் உடைத்து அங்கிருந்த உண்டியலை சேதப்படுத்தி சுமார் ரூ.20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் கோயில் சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க்கையும் மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலி பொட்டு, அம்மன் பட்டு புடவையினுள் இருந்ததால் அவை தப்பியது.
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post விழுப்புரம் பூந்தோட்டத்தில் அம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் ₹20,000 கொள்ளை: நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை appeared first on Dinakaran.