கால்நடை மருத்துவர்கள் 454 பேரை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கால்நடை மருத்துவர்கள் 454 பேரை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 11 ஆண்டுகளாக பணியாற்றும் 454 பேரும் போட்டி தேர்வு எழுதி வென்றால்தால் பணியில் தொடர முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக கால்நடை மருத்துவர்கள் அனைவருக்கும் தேவைக்கும் அதிகமான கல்வித் தகுதியும், அனுபவமும் உள்ளது. தற்காலிக கால்நடை மருத்துவர்கள் தங்களின் இளமையை தொலைத்து அரசுக்காக பணி செய்துள்ளனர் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

The post கால்நடை மருத்துவர்கள் 454 பேரை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: