அப்போது, மினிலாரி எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டேங்கர் லாரி மீது நேருக்குநேர் மோதியது. இதில் இரு லாரிகளும் தீப்பிடித்து எரிந்ததில் கிளீனர் பிரதாப் கருகி பலியானார். படுகாயமடைந்த டிரைவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ரகு மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து பாச்சல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், அதிகாலை தூக்க கலக்கத்தில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post லாரிகள் மோதல் தீப்பிடித்து எரிந்ததில் கிளீனர் கருகி பலி 2 டிரைவர்கள் சீரியஸ் appeared first on Dinakaran.
