திருச்சியில் ரோந்துப் பணியின் போது விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருச்சியில் ரோந்து பணியின் போது விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஜூலை 30-ல் அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் ரோந்துப் பணியின்போது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த காவலர் ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

The post திருச்சியில் ரோந்துப் பணியின் போது விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: