திருச்சி விமான நிலையத்தில் கழிவறை மற்றும் சாணை இருந்து ரூ. 24 லட்சம் மதிப்புள்ள 397 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கழிவறை மற்றும் சாணை இருந்து ரூ. 24 லட்சம் மதிப்புள்ள 397 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் வந்த ஆண் பயணி கிரைண்டர் எந்திரத்தில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.21 லட்சத்து 27 ஆயிரத்து 672 மதிப்பிலான 348 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 586 மதிப்பிலான 49 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை கழிவறையில் வீசிச்சென்றது யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் நேற்று மொத்தம் ரூ.24 லட்சத்து 27 ஆயிரத்து 258 மதிப்பிலான 397 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post திருச்சி விமான நிலையத்தில் கழிவறை மற்றும் சாணை இருந்து ரூ. 24 லட்சம் மதிப்புள்ள 397 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். appeared first on Dinakaran.

Related Stories: