பொங்கல் திருநாளுக்கு 6 நாட்கள் முன்பாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பர். இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை தொடரும் என அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்துள்ளார். தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் தெரிவிக்கப்படும் எனவும், போக்குவரத்துத்துறை தொழிற்சங்கத்தினர் விடுத்த கோரிக்கை தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நிதி கூடுதலாக செலவாகும் என்பதால் நிதித்துறை அதிகாரிகளுடன் பேசிவிட்டு நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
The post போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.