அந்த ஹெலிகாப்டரில் ஜெபஸ்டின் உள்பட மொத்தம் 4 பேர் பயணித்தனர். லகோ ரங்கொ அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த கோர விபத்தில் ஜெபஸ்டின் பினேரா உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் பயணித்த எஞ்சிய 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் கேப்ரியல் போரிக் தேசிய அளவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கூறியுள்ளார். அதேவேளை, இந்த விபத்துக்கான காரணம், ஜெபஸ்டின் பினேரா உடன் பயணித்த 3 பேர் யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
The post சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: தேசிய அளவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.