மேலும் அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் தோல்விகளுக்கு புஜாரா பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய கிரிக்கெட்டின் விசுவாசமான சேவகர், அமைதியான மற்றும் திறமையான சாதனையாளர். ஆனால் எந்த சமூகதளத்திலும் அவருக்கு மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் இல்லை என்பதால், அவர் கைவிடப்பட்டால் யாரும் குரல் கொடுக்கமாட்டார்கள் என்பதால் நீங்கள் அவரை கைவிடுகிறீர்களா?. இது புரிந்துகொள்ள முடியாத ஒன்று. அவரை நீக்குவதும், மற்றவர்களை வைத்துக்கொள்வதும் என்ன அளவுகோல். இப்போதெல்லாம் அணி அறிவிப்புக்கு பின் தேர்வுக் குழுதலைவரோஅல்லது உறுப்பினர்களோ செய்தியாளர்களை சந்திப்பதில்ல. இதனால் இந்தக் கேள்விகளை நீங்கள் உண்மையில் யாரிடம் கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை,” என்றார்.
The post டெஸ்ட் சாம்பியன் ஷிப் தான் பறிபோய் விட்டது: உலக கோப்பைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.! கவாஸ்கர் பேட்டி appeared first on Dinakaran.