கோயில் அர்ச்சகர் வீட்டில் 20பவுன் 1லட்சம் கொள்ளை

 

சேலம், நவ.11: சேலம் சண்முகாநகரை சேர்ந்தவர் வஜ்ரவேல்(55). கோயில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் மனைவியுடன் நாழிக்கல்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்றார். நேற்று காலை 6 மணிக்கு திரும்பிவந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 20 பவுன் நகை, ₹1 லட்சம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிசென்றது தெரியவந்தது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் பேபி, சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

The post கோயில் அர்ச்சகர் வீட்டில் 20பவுன் 1லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: