இளம்பெண்ணை மிரட்டி 5 ஆண்டாக பலாத்காரம் பாதிரியார் கைது

கயத்தாறு: இளம்பெண்ணை 5 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு வழிபாட்டுக்கு செல்வது வழக்கம். கடந்த 2018ல் இங்கு பாதிரியாராக பணியாற்றிய வேலூர் மாவட்டம் எழில்நகர், பெரிய அல்லாபுரம் வினோத் ஜோஸ்வா (40), வித்யாவை ஏமாற்றி, மிரட்டி 2022 வரை 5 ஆண்டாக பலாத்காரம் செய்துள்ளார்.யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து இளம்பெண் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, தற்போது வேலூரில் பணியாற்றும் பாதிரியார் வினோத் ஜோஸ்வாவை கைது செய்தனர்.

The post இளம்பெண்ணை மிரட்டி 5 ஆண்டாக பலாத்காரம் பாதிரியார் கைது appeared first on Dinakaran.

Related Stories: