இந்நிலையில், அடிக்கடி நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என அர்ச்சனா சொல்லி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பயந்துபோன சரத்பாபு மற்றும் அவரது பெற்றோர் அர்ச்சனாவை அவரது தாய் வீட்டில் அழைத்து சென்று விட்டுள்ளனர். பின்னர், அர்ச்சனாவின் தாயிடம் அர்ச்சனாவிற்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி வருகிறார்.
அவரது மனம் மாறியதற்கு பிறகு அனுப்பி வையுங்கள் என ஒப்படைத்து விட்டு சென்றுள்ளனர். இதற்கிடையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அர்ச்சனா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.