அதன்படி, எந்தெந்த மாநிலத்தில், எந்த கட்சிகள் மைக்ரோ கன்ட்ரோலர் சிப்பை சரிபார்க்க எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளன என்ற விவரத்தை தலைமை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. ஆந்திரா, சட்டீஸ்கர், அரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருக்கும் 8 மக்களவை தொகுதிகளில் மனு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை பொருத்தமட்டில், வேலூர் தொகுதியில் வேலூர், அணைகட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஆறு வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கன்ட்ரோலர்களை மறுஆய்வு செய்ய பாஜ தரப்பிலும், விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பிலும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் விருதுநகர், வேலூர் உட்பட 6 மாநிலங்களில் 8 தொகுதியில் இவிஎம்களை சரிபார்க்க மனு appeared first on Dinakaran.