தமிழ்நாட்டில் நேற்று 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதியானது

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு ஜேஎன் 1 வகை கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவாவில் 34 பேருக்கும் மராட்டியத்தில் 9 பேருக்கும் கர்நாடகாவில் 8 பேருக்கும் கேரளாவில் 6 பேருக்கும் புதிய வகை கொரோனா தொற்று உறுதியானது. தமிழ்நாட்டில் 4 பேருக்கும் தெலுங்கானாவில் 2 பேருக்கும் புதிய வகை கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் நேற்று 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதியானது appeared first on Dinakaran.

Related Stories: