அதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே வெப்பத்தை தணிக்க வருண பகவான் கருணையால் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் மே 8ம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அது வலுப்பெற்று வடக்கு நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது… மே 29ம் தேதி வரை 25 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்!! appeared first on Dinakaran.