தமிழ்நாடு முழுவதும் உள்ள பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்: மின்வாரியம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மின் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய பொறியாளர்களுக்கு தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் தமிழகம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும். அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மீட்டர்கள் பழுதடைந்து உள்ளது. அதன்படி, பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் உள்ள பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும்: மின்வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: