தினந்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற பரிந்துரையை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம் உள்ளிட்ட விபரங்கள் ஆராயப்பட்டது. கர்நாடகாவில் இம்முறை பருவமழை சராசரியையொட்டி இருக்கும் என வானிலை முன்னறிவிப்பு இருந்தாலும், தற்போது வரை 28 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக ஜூலை 14ம் தேதி(நாளை) மாலை 4 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது, என்றார்.
The post தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் பரிந்துரையை எதிர்த்து முறையீடு: நாளை அனைத்து கட்சி கூட்டம், கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம் appeared first on Dinakaran.