கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காலி பணியிடம் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்பதில் முதல்வர் மிகுந்த அக்கறையுடன் இருந்து வருகிறார். அந்த வகையில் ஆசிரியர்கள் காலி பணியிடம் விரைவில் நிரப்பப்படும். இதேபோல் டெட் தேர்வும் மிக விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நடத்தப்படும். சமக்ர சிgfஷா அபியான் திட்டத்தில் ஒன்றிய அரசின் கொள்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாததால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியினை ஒன்றிய அரசு இதுவரையில் விடுவிக்கவில்லை. ஆனால் தமிழக அரசு சார்பில் முதல் தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.
2025- 26 ம் ஆண்டிற்கும் வழங்க வேண்டிய ரூ. ஆயிரத்து 800 கோடி தொகை வழங்கப்படவில்லை. மாநில அரசின் கல்விக் கொள்கையானது பள்ளிக் கல்வித்துறையும், உயர்கல்வி துறையும் இணைந்ததாகும். இதில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில கல்விக் கொள்கை இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
The post தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில கல்வி கொள்கை இம்மாதம் இறுதியில் வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.
