இறந்த வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள ராணுவம், தரைவழி தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 152 வீரர்களை போரில் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பலியான 14 வீரர்கள் 4 பேர் ஏவுகணை தாக்குதலிலும் மற்றவர்கள் துப்பாக்கி சண்டையிலும் இறந்துள்ளனர். ஹமாசின் இந்த தீவிரமான தாக்குதலுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இப்போரில் இதுவரை 20,258 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்னும் 129 பிணைக் கைதிகள் ஹமாஸ் பிடியில் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.
The post தெற்கு காசாவில் போர் தீவிரம் இஸ்ரேல் வீரர்கள் 14 பேர் 2 நாளில் பலி: ஹமாஸ் கடும் பதிலடி appeared first on Dinakaran.