ஜார்க்கண்ட் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு சோரன் பங்கேற்க அனுமதி

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததை அடுத்து சம்பாய் சோரன் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

அவரது அரசு மீது ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதிக்க கோரி, சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதற்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post ஜார்க்கண்ட் அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு சோரன் பங்கேற்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: