மேலும், அந்த கப்பலில் உள்ள கேப்டனை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலின் நகர்வை இந்திய கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.சமீபகாலமாக அரபிக் கடல் பகுதியில் சோமாலியா கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. கடத்தல் அச்சுறுத்ததலுக்கு மத்தியில் தான் சரக்கு கப்பல்கள் அங்கு பயணிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த சரக்கு கப்பலில் 18 மாலுமிகள் பயணித்தனர்.இந்த கடத்தலின் போது படுகாயமடைந்த மாலுமி ஒருவரை இந்திய கடற்படை மீட்டது.
The post சோமாலியா அருகே சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்.. 15 மாலுமிகளின் நிலை என்ன ? appeared first on Dinakaran.