டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவாகி வருகிறது. பனிபொழிவின் காரணமாக கடந்த வாரத்தில் காண்புதிறன் 25 மீட்டராக குறைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காண்பு திறன் முன்னேற்றமடைந்து வருகிறது.
பனிப்பொழிவு காரணமாக சாலையில் எதிரே வரும் வாகனம் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் பகல் நேரங்களிலும் விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன. நேற்று (ஜன.01) டெல்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காண்புதிறன் 700 மீட்டராக பதிவானது. மேலும் இன்றும் அப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணாமப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக வடமாநிலங்களில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் சென்னையில் இருந்து டெல்லி சென்ற 3 ரயில்கள் உட்பட 6 ரயில்கள் தாமதம் என வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. டெல்லி ரயில் நிலையத்துக்கு வந்து சேர வேண்டிய பல ரயில்கள் 6 மணி நேரம் வரை தாமதமாக வருகிறது என வடக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
The post கடும் பனிப்பொழிவால் சென்னையில் இருந்து டெல்லி சென்ற 3 ரயில்கள் உட்பட 6 ரயில்கள் தாமதம்! appeared first on Dinakaran.