ஒரு சாதாரண வழக்கில் ஒரு குற்றவாளியை விசாரிக்க 4 மாதங்கள் எடுத்துக் கொண்ட பிறகும், அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்று அமலாக்கத்துறை கடுமையாக வாதாடியதால் சென்னை உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில், அரைவேக்காடு அண்ணாமலை தாம் ஒரு நீதிபதி போல காட்டிக் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காது என்று ஆணவத்தின் உச்சில் அமர்ந்துக் கொண்டு பேசியிருக்கிறார். இன்றைக்கு மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காது என்று ஒரு மாநில பாஜ தலைவர் அண்ணாமலை கூறுவது நீதிமன்ற நடைமுறையில் தலையிடுகிற மிகப்பெரிய குற்றமாகும். கூலிக்கு கூட்டத்தை சேர்த்து அதிரடி பேச்சுக்களின் மூலம் தாம் ஒரு தலைவராக முடியும் என்று பகல் கனவு காண்கிறார் அண்ணாமலை.
The post செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என அண்ணாமலை கூறுவது நீதிமன்றத்தின் நடைமுறையில் தலையிடுகிற குற்றம்: கே.எஸ்.அழகிரி அறிக்கை appeared first on Dinakaran.