தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளை கேட்க வேண்டும்: ஒன்றிய அரசு கருத்து

டெல்லி: தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளை கேட்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திருமணச் சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடக் கூடியதாக இருப்பதால் மாநிலங்களின் கருத்து அவசியம் என்றும் தன் பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த சமுதாயத்தின் பார்வை மாறி இருப்பது மிக முக்கியமான சாதனை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஆண் மற்றும் பெண் இடையிலான திருமணங்களை மட்டுமே அங்கீகரிக்க முடியும் என ஒன்றிய அரசு வாதம் வைத்தது. தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கக்கூடிய வழக்கில் முடிவெடுக்க வேண்டியது நாடாளுமன்றம் தான் எனவும் தெரிவித்துள்ளது

The post தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளை கேட்க வேண்டும்: ஒன்றிய அரசு கருத்து appeared first on Dinakaran.

Related Stories: