ஆனால் அவர்கள் கூறியபடி உறுப்பினர் பதவிக்கான உத்தரவு ஏதும் வரவில்லை. நாளடைவில் அவர்கள் ஏமாற்றுவதை தெரிந்த ெகாண்ட டாக்டர், அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஜோதிகுமார், சேலம் அழகாபுரம் ஏடிசி நகரை சேர்ந்த அசோகன்(65), சேலம் ஆத்தூரைச்சேர்ந்த வேளாண்மைத்துறை அதிகாரி மாசிலாமணி, மற்றும் அசோக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் இன்னொரு மோசடி வழக்கில் கைதாகி சென்னை சிறையில் இருந்த ஜோதிக்குமாரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருகின்றனர். இவர்களில் சேலம் ஏடிசி நகரை சேர்ந்த அசோகன் சேலம் 3வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் சரண் அடைந்தார். மாஜிஸ்திரேட் உத்தரவின்படி அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post ஒன்றிய உணவுத்துறையில் பொறுப்பு தருவதாக சேலம் டாக்டரிடம் ரூ.2.48 கோடி மோசடி: சேலம் கோர்ட்டில் ஒருவர் சரண்; 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.