மெட்ரோ 3வது வழித்தடத்தில் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,204 கோடியில் ஒப்பந்தம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் 3ம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1204.87 கோடி ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்ட வழித்தடம் 3ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 1204.87 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஜேஐசிஏ நிதியுதவியின் ஒரு பகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ஜூன் 2ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் கெல்லிஸ் என நான்கு சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அயனாவரம், புரசைவாக்கம் ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘டயாபிராம் சுவர்’ தவிர மற்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவன நிர்வாக துணைத் தலைவர் ராமன் கபில் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ், இணை பொது மேலாளர் ரீபு டாமன் துபே, மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post மெட்ரோ 3வது வழித்தடத்தில் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,204 கோடியில் ஒப்பந்தம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: