எதிர்காலத்தில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும்போது, இந்த ராக்கெட்டின் தரவுகள் விஞ்ஞானிகளுக்கு பயன்படும். 200 மில்லி மீட்டர் விட்டமும் 3,590 மில்லி மீட்டர் நீளமும் கொண்ட RH 200 என்ற சவுண்டிங் ராக்கெட்டின் எடை 108 கிலோ ஆகும். விண்ணில் சுமார் 100 கிலோ மீட்டர் உயரம் வரை பயணித்த பின், இந்திய பெருங்கடலில் விழும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்வி. மார்க்-3 ஆகிய முக்கியமான ராக்கெட்டுகளுக்கு முன்னோடியாக இருந்தது ‘ஆர்.எச்.200’ என்று அழைக்கப்படும் ‘சவுண்டிங்’ ராக்கெட்டாகும். ரோகிணி என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் இன்று பிற்பகல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
The post வரலாறு படைத்தது குலசை.. காற்றை கிழித்து விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த ரோகிணி ராக்கெட்!! appeared first on Dinakaran.