ராயனூர் கடைவீதி சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய கோரிக்கை

 

கரூர், நவ. 11: கருர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் தில்லை நகர் பகுதியில் இருந்து பொன்நகர் வரை சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதில், வர்த்தக நிறுவனங்களை ஒட்டி சாக்கடை வடிகால் செல்கிறது. இந்த சாக்கடை வடிகால் குறிப்பிட்ட தூரம் வரை அடைப்பு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீடுவதுடன் பல்வேறு தொற்றுநோய்களையும் பரப்புகிறது. இதில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, இதனால், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ராயனூர் கடைவீதியை ஒட்டிச் செல்லும் சாக்கடை வடிகாலை பார்வையிட்டு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சுத்தம் செய்து, கழிவு நீர் எளிதாக செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ராயனூர் கடைவீதி சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: