அமராவதி: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆத்மகூர் வனப்பகுதியில் நடத்திய சோதனையில் காரில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற 4 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்களிடம் இருந்து 55 செம்மரக் கட்டைகள், கார், இருசக்கர வாகனத்தை போலீஸ் பறிமுதல் செய்தது.
The post ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டை பறிமுதல்!! appeared first on Dinakaran.