ராஜபுத்திரர்கள் பற்றி அவதூறு பேச்சு தேர்தல் முடிந்த பிறகு மன்னிப்பு கேட்ட பர்ஷோத்தம் ரூபாலா

ராஜ்கோட்: ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் போட்டியிட்டார். அவர் ராஜபுத்திரர்கள் சமூகம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால் ராஜபுத்திரர்கள் போராட்டங்களை நடத்தினர். நேற்று முன்தினம் குஜராத்தில் வாக்குப் பதிவு முடிந்து விட்ட நிலையில் ராஜபுத்திரர்கள் பற்றிய அவதூறு பேச்சுக்கு பர்ஷோத்தம் ரூபாலா மன்னிப்பு கேட்டார். அவர் கூறுகையில்,’ராஜபுத்திரர்கள் பற்றிய பேச்சால் தேர்தல் நேரத்தில் பொதுவாழ்வில் கடினமான சூழல் ஏற்பட்டது. இந்த பேச்சு என் தவறு, அதற்கு நான்தான் பொறுப்பு அதனால் ராஜபுத்திர சமூகத்தினர் அனைவரிடமும் இப்போது மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

The post ராஜபுத்திரர்கள் பற்றி அவதூறு பேச்சு தேர்தல் முடிந்த பிறகு மன்னிப்பு கேட்ட பர்ஷோத்தம் ரூபாலா appeared first on Dinakaran.

Related Stories: