சோதனை நடத்தப்பட்ட அதேகால கட்டத்தில் பாஜவுக்கு அந்த 30 நிறுவனங்களிடம் இருந்து பாஜவுக்கு ரூ.335 கோடி தேர்தல் நிதி தரப்பட்டுள்ளது. இந்த 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்கள் சோதனைக்கு முன் பாஜவுக்கு தேர்தல் நிதி அளித்தது இல்லை” என்று வௌியான தகவல் மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜவின் தேர்தல் நிதி வசூலிக்கும் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுவதாக உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “புலனாய்வு அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுத்து தேர்தல் நிதி என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் பாஜவின் செயல்களுக்கு நல்ல உதாரணம். விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் சிக்கிய நிறுவனங்கள் ஆளும் கட்சியான பாஜவுக்கு ஏன் தேர்தல் நிதி தர வேண்டும்?. பாஜவிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால், பாஜவின் கஜானா நிரம்ப வழி செய்த சோதனைகளின் காலவரிசை பற்றி புள்ளிக்கு புள்ளி மறுப்பு தெரிவிக்க முடியுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
The post ரெய்டுக்கு பின் வசூலான நன்கொடை பற்றி வெள்ளை அறிக்கை வௌியிட பாஜவுக்கு காங்கிரஸ் சவால் appeared first on Dinakaran.