சித்தூர் முதலாவது வார்டு அக்ரஹாரம் மயானத்தில் வசதிகளை ஏற்படுத்த முன்மொழிவுகளை தயாரிக்க வேண்டும்

*ஆணையருக்கு எம்எல்ஏ அறிவுறுத்தல்

சித்தூர் : சித்தூர் முதலாவது வார்டு அக்ரஹாரம் மயானத்தில் மயான வளாகம், இதர வசதிகள் ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகளை தயாரிக்க வேண்டும் என்று ஆணையருக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினார். சித்தூர் மாநகராட்சிக்கு உள்பட்ட முதலாவது வார்டு எம்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள மயானத்தை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்களுடன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆணையர் அருணாவுடன் எம்எல்ஏ குரஜாலா ஜெகன்மோகன் ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மயான வளாகம் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகளை தயாரிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.

முன்னதாக அக்ரஹாரம் அரசுப் பள்ளிக்கு எம்எல்ஏ மாணவர்களின் மதிய உணவை ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு சுத்தமான மற்றும் தரமான உணவு வழங்க வேண்டும். மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பள்ளியில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு தெரிவித்தார்.இதில் மாநகராட்சி மேயர் அமுதா மாநகராட்சி ஆணையர் அருணா, முன்னாள் எம்.எல்.சி துரை பாபு, துணை மேயர் ராஜேஷ்குமார் ரெட்டி, கார்ப்பரேட்டர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

The post சித்தூர் முதலாவது வார்டு அக்ரஹாரம் மயானத்தில் வசதிகளை ஏற்படுத்த முன்மொழிவுகளை தயாரிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: