இதன் மூலம் தமிழ் தலைவாஸ் 17 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் அதே 10வது இடத்தில் நீடிக்கிறது. இனி வரும் போட்டிகளில் வெல்வதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி படிப்படியாக புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதுடன் பிளே ஆப் சுற்று கனவையும் எட்ட வாய்ப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து நடந்த 83வது லீக் போட்டியில் புனேரி பால்டன்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய புனேரி பல்டான் 34-24 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸை வீழ்த்தியது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 84வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியுடன் பெங்கால் வாரியர்ஸ் அணி மோதுகிறது. 9 மணிக்கு நடைபெறும் 85வது லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-அரியானா டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
The post புரோ கபடி லீக்: பெங்களூர் புல்ஸை புரட்டி எடுத்த தமிழ் தலைவாஸ் appeared first on Dinakaran.